Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Sunday, December 26, 2010

Google SMS Channels கையாளுவது எப்படி

கூகுள் labs  இல் ஒரு முக்கியமான பயன்பாடு Google SMS channels.  நாம் இதனை register செய்த போது இதனால் நமக்கு சில தொல்லைகள் வருவது உண்டு. அவைகளை எப்படி கையாளுவது என்பதை இங்கு காண்போம்.

முதலில் Google SMS channels என்றால் என்ன ?? எப்படி பயன்படுத்துவது ??

இது முழுக்க முழுக்க google ஆல்  உருவாக்கப்பட்டு அதன் பயனர்களால் நடத்தப்படும் ஒரு பயன்பாடு. உங்கள் Gmail id மூலம் நீங்கள் இதில் நுழைந்து உங்களுக்கு தேவையான சேனல்களை நீங்கள் activate செய்து உங்களுக்கு பிடித்த category இல் மெசேஜ்களை உங்கள் இன்பாக்ஸ் இல் பெறலாம்.உங்கள் மொபைல் எண் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை எனவே இது மிகவும் பாதுகாப்பான ஒன்று. ஆனால் செய்திகளின் உண்மை தன்மைக்கு கூகுள் பொறுப்பேற்காது. இதற்க்கு எந்த விதமான  கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. மெசேஜ் கள் 9870807070 என்ற என்னில் இருந்து வரும்.



எப்படி சேனல்களை choose செய்வது??
 BuyAndSell
  Business
  Education
  Entertainment
  Finance
  Food
  Health
  Jobs
  Jokes
  News
  Shopping
  Spirituality
  Sports
  Technology
  Travel
  Weather
  Other
இவைதான் Google sms channel categories . உங்களுக்கு வேண்டியதை இதன் மூலம் நீங்கள் தெரிவு செய்யலாம்.

இது மட்டும் இன்றி key word ஐ டைப் செய்தும்  நீங்கள் பெறலாம்.
அதிகபட்சமாக  நீங்கள் 17 சேனல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேனல்களை control செய்வது எப்படி??



நாம் தான் நமக்கு சேனல் ஐ activate செய்து விட்டோமே பின் என்ன control செய்வது என்கிறீர்களா ? என்னதான் நாம் நல்ல சேனல்களை activate செய்து விட்ட போதிலும் நமக்கு இதனால் சில தொந்தரவுகள் வருவது உண்டு.

  • கண்ட நேரத்தில் மெசேஜ் வருவது.
  • தேவை அற்ற மெசேஜ்கள்
  • தரமில்லா மெசேஜ்கள் 
  • அடிக்கடி தொந்தரவு தரும் மெசேஜ்கள் 
  • அதிக மெசேஜ்கள்
இப்போது  இதனை control செய்யும் முறைகளை கவனிப்போம்.

---> முதலில்  channel பெயரில் கிளிக் செய்து கடைசியாக அவர்களில் சில போஸ்ட் களை காணவும். பிடித்து இருந்தால் மட்டும் தெரிவு செய்யவும். இல்லை என்றால் விட்டு விடவும்.

---> தினமும் நீங்கள் activate செய்த சேனல்களில்  எத்தனை மெசேஜ்கள் என்பதை நீங்கள் இதில் பார்த்து கொள்ளலாம்.

---> எல்லா சேனல்களையும் control செய்ய வலது மேல் மூலையில் உள்ள settings செல்லவும்.

இப்போது கீழ்வரும் window வரும்.

வட்டமிட்டுள்ள இடங்களில் நீங்கள் உங்களுக்கு தேவையானபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

போன் நம்பரை மாற்றி இருந்தால். remove phone  number கொடுத்து விட்டு பின்னர் புதிய எண்ணை கொடுத்து விடலாம்.

Channel ஐ deactivate செய்ய

Google sms channel---> my Channel---> Unsubscribe 

அவ்ளோதான் அந்த சேனல் இல் இருந்து எந்த மெசேஜ் உம் இனி உங்களுக்கு வராது . . 

 

channel owner ஆக என்ன செய்ய வேண்டும்??



உங்களுக்கும் எதையாவது இதன் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் எனது முந்தைய பதிவை படிக்கவும்.

SMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற  படிக்கவும.

அதில்  நீங்கள் தினமும் மெசேஜ் போஸ்ட் செய்ய முடிந்தால். source என்பதை விட்டு விடவும். ஆனால் நீங்கள் தினமும் இதற்கு உங்கள் சேனல்க்கு சென்று போஸ்ட் செய்ய வேண்டி வரும். 

போஸ்ட்  செய்ய வேண்டும் எனில்

google sms channel---> my Channel---> your blog channel(click on title) சென்று உங்கள் channel இல் new message இல் போஸ்ட் கொடுத்து விடலாம். இதனால் உடனடியாக சென்று விடும். உங்கள் சேனல் ஐ நீங்கள் உங்கள் blog இல் விளம்பரம் செய்து கொள்ளலாம்.இதன் மூலம் உங்களுக்கு பயனர்கள் அதிகமாக வந்தால் உங்கள் ப்ளாக் ஐ நீங்கள் அதன் மூலம் விளம்பரம் செய்து கொள்ளலாம்.  


எனது சேனல்கள் 

IQ_Today

Balepandiya 

சந்தேகம் இருப்பின் கேட்கவும் 

◘பலே ட்வீட்◘
 

ராடியாகிட்ட பேசுறதும் ரேடியோலும் பேசுறதும் ஒண்ணுதான். எல்லோரும் கேட்கிறாங்கப்பா (கொஞ்சம் லேட்டுதான் ஹிஹிஹி)

                                                                                                                  _ iamkarki@twitter.com

ஒரு கடிகாரத்தை கண்டெடுத்தேன்.அது காட்டுகிறது தவறவிட்டவரின் கெட்டநேரம்.

                                                                                                                   _varikkuthirai@twitter.com 

தன்னைதானே தாழ்த்தி போடப்படும் ட்விட்டுகள் மற்றவர்களால் அதிகம் விரும்பி படிக்கப்படுகின்றன. # தமிழேன்டா...

                                                                                                                     _kuttysuvaru@twitter.com

  

                                                                                
                                                                                                                 

Thursday, December 23, 2010

Aptitude5: Calender Problems solve செய்வது எப்படி???

27 /10 /1989 இந்த தேதிக்கு உங்களால் சரியான  கிழமையை கூற முடியுமா. கொஞ்சம் இந்த பதிவை படியுங்கள் பின்னர் நீங்கள் எந்த ஆண்டுக்கும் ஒரே நிமிடத்தில் இதனை கூற முடியும்.



வணக்கம் நண்பர்களே நான் எழுதிய கடந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த, படித்த, தொடர் பதிவு இடப்போகும் அனைவர்க்கும் என் உளமார்ந்த  நன்றிகள். உங்களின் ஆதரவை  என்னுடைய இந்த aptitude பதிவுகளுக்கும நான் எதிர் பார்க்கிறேன்.

இப்போது 27 /10 /1989 இன் கிழமையை கண்டு பிடிப்போம். இதற்கு உங்களுக்கு கொஞ்சம் ஞாபக சக்தியும், கூடவே எளிய கணித திறமையும் இருந்தால் போதுமானது.

ஸ்டெப்   A :  
கொடுத்துள்ள வருடத்தை 7ஆல் வகுத்து மீதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கவனிக்க:---- இங்கு நீங்கள் ஈவு பற்றி கவலைப்பட தேவை இல்லை.

1989/7 க்கு மீதி 1 .  

ஸ்டெப் B : 

இப்போது  அதே வருடத்தை 4 ஆல் வகுத்து ஈவினை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
கவனிக்க:---- இங்கு நீங்கள் மீதி  பற்றி கவலைப்பட தேவை இல்லை.

1989/4 க்கு ஈவு 497.

இப்போது கிடைத்த விடையை மீண்டும் 7 ஆல் வகுக்கவும், வகுத்து மீதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கவனிக்க:----இந்த இடத்தில ஈவினை மறந்து விடவும்.

497/7 க்கு மீதி 0.

ஸ்டெப் C:

இப்போது உங்கள் தேதியை நீங்கள் 7ஆல் வகுக்கவும். இங்கு  மீதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கவனிக்க:---- இங்கு நீங்கள் ஈவு பற்றி கவலைப்பட தேவை இல்லை.
                :---- தேதி 7 ஐ விட சிறியதாக இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளவும் 

27 /7 க்கு மீதி 6 . 

ஸ்டெப் D:
 
இந்த இடத்தில் நாம் நமது மாதத்திற்கு code ஒன்றினை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது லீப் வருடம் மற்றும் சாதாரண வருடங்களுக்கு என உள்ளது.

Month Ordinary Year Code Leap Year Code
January 0 0
February 3 3
March 3 4
April 6 0
May 1 2
June 4 5
July 6 0
August 2 3
September 5 6
October 0 1
November 3 4
December 5 6

லீப் வருடமா என்பதை தெரிந்து கொள்ள அந்த வருடத்தை நான்கால் வகுக்கவும். மீதி வரவில்லை எனில் அது லீப் வருடம்.


நீங்கள் இதனை எளிதாக நினைவில் கொள்வது மட்டும் உங்கள் வேலை. உங்களுக்கு எளிதாக புரிகிற முறையில் இதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

இப்போது நமக்கு வேண்டிய அக்டோபர் மாதத்தின் code ௦(ordinary year) ஆகும்.

Last Step: 
ordinary year  = (A+B+C+D-2)/7
Leap Year= (A+B+C+D-3)/7

இதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளவும்.

இப்போது  நமது விடைகளை மேலே உள்ள formula வில் apply செய்யவும்.
A=1
B=0
C=6
D=0
இது ordinary year எனவே
(1 +0 +6 +0-2 )/7= 5/7
.
இங்கு தான் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. இந்த மாதிரி விடையின் பின்னத்தில் மேலே உள்ளது தான் நமது விடை. ஆனால் எப்படி அதற்கு எப்படி நீங்கள் தேதியை கண்டுபிடிக்க வேண்டுமென யோசிக்கிறீர்களா. இதற்கும்  ஒரு சிறிய விஷயம் நினைவில் கொள்ள வேண்டியது உள்ளது (மறுபடியுமா!!).

0-Sunday
1-Monday
2-Tuesday
3-Wednesday
4-Thursday
5-Friday
6-Saturday
7-Sunday. 
எனவே 7 ஐ நீங்கள் பூஜ்ஜியம் என இங்கே வைத்து கொள்ளவும்.


இப்போது உங்கள் தேதிக்கான கிழமை
"வெள்ளிக்கிழமை ".

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்போது வரும் புது வருடத்திற்கான முதல் தேதியை காணலாம். 

1/1/2011.
A= 2011/7= மீதி 2.
B=2011/4= ஈவு 502, 502/7= மீதி 5.
C=1/7= மீதி 1.
D=  2011 Ordinary Year எனவே code 0.

விடை= (A+B+C+D-2)/7=(2+5+1+0-2)/7=6/7 . ஆறு= சனிக்கிழமை. 
சரியாக வந்து விட்டதா. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி: இதுதான் மிக முக்கியம் பின்னத்தின் மேலே உள்ள எண் மைனஸ்(-5 /7). ஆக இருந்தால், விடையானது 7-5=2 . இரண்டாவது எண் "செவ்வாய்க்கிழமை" இப்படி வைத்துக் கொள்ளவும். 

ஏதேனும் புரியாவிடில் அல்லது விடை தவறாக இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.






◘பலே ட்வீட்◘
 
தொடர்ச்சியான ரெய்டுகளுக்காக கலைஞருக்குப் பாராட்டு விழா  எடுக்கும் எண்ணம் இருக்கிறதா ?# ஜெகத்ரட்சகன்
                                                                                                                      -thippetti@twitter.com
ஓடும் பேருந்தில் இருந்து ரேசன் கடையில் விற்கும் பொருள் வரை அனைத்திலும் இருக்கும் கருணாநிதி படம் டாஸ்மாக் சரக்கில் மட்டும் இல்லை # டவுட்டு
                                                                                                                    -KamaRaj@facebook.com


Sunday, December 19, 2010

தெய்வத்தை கல்லாக்கி விட்டோம் குழந்தைகளை??

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு தோழி ஆமினா வின் "இது என்ன மாற்றம்??? " என்பதற்கு தொடர் பதிவு. என்னால் அவர்களுக்கு ஈடாக எழுதத் தெரியுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் என்னால் முடிந்ததை நான் எழுத விழைகிறேன்.
நான் இந்த தொடர்பதிவை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நம் ஒவ்வொருவருக்கும் நம் சமூகத்தின் மீது சில வருத்தங்கள், கோபங்கள் இருக்கும் . என்னுடையது நம் சமூகத்தில் குழந்தைகளின் நிலைமை குறித்தது. இதனை மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார் ஆமினா.

என்னுடையதை நான் நான்கு விசயங்களாக பிரித்து கொள்கிறேன்.

முதலாவது,


அன்று பாரதி பாடினான்,

"காலை முழுவதும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா"

இன்று நம் குழந்தைகள் தமிழ் கட்டாய பாடம் என்பதால் இதன் அர்த்தமே புரியாமல் தான் படிக்கின்றார்கள்!
தமிழின் அடையாளமான ஒரு புலவனின் பிறந்தநாளுக்கு குறுஞ்செய்தி அனுப்பாத நாம் மறுநாள் ரஜினியின் பிறந்த நாளுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொல்கிறோம்.யாருடைய தவறு இது??
தடதடவென பேசுகின்றன இன்றைய குழந்தைகள். ஆனால் நம் தமிழில் இல்லை. பெருமையாகத்தான் இதை சொல்கின்றனர் எல்லா பெற்றோரும்.


"மாமாவை சித்தப்பா என்றமைக்கு
அடி வாங்கினேன் நான்!!
சித்தியை அத்தை என்றமைக்கு
அடிவாங்கினாள் தங்கை!!
அம்மாவை அம்மா என்றமைக்கு
அடிவாங்குகிறது என் குழந்தை!! "


இன்று அந்த பிள்ளை அம்மா, அப்பா என்று அழைக்கும் முன்பே மிஸ், ஸ்கூல் என்று உளறுகிறது. 10 கிலோ குழந்தை 50 கிலோ பாட புத்தகத்தை தூக்கி செல்கிறது. அந்த பிள்ளைகளை ஒலிம்பிக்குக்கு அனுப்பி இருந்தால் பத்து தங்கமாவது கிடைத்து இருக்கும்!!.

திருமணத்திற்கு வயது வரம்பு கொடுத்த அரசாங்கம் இந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் வயதை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் கொஞ்ச காலமாவது குழந்தைகளாக இருப்பார்கள்.

இரண்டாவது,


"நான் இப்படி ஆக நினைத்தேன் முடியவில்லை நீயாவது அப்படி ஆக வேண்டும்."
உலகிலேயே மிகக் கொடுமையான எண்ணம் இதுதான். உங்களை போல வாழ்வதற்கு குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை வாழவில்லையே.

படம் வரையும் குழந்தையிடம் பயில்வான் ஆக சொல்லாதீர்கள். கொஞ்சம் தூரிகை வாங்கி தாருங்கள், வருங்கால பிக்காசோ என் குழந்தை என் சொல்லி கொள்ளுங்கள். ஏன் என்றால் பெரியவர்கள் மனம் இதற்க்கெல்லாம் உடைவது அல்ல.ஆனால் குழந்தைகள் உடைந்து விடுவார்கள். இது வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும் உங்களுக்கும் கூட இது இருக்கலாம்.

இப்போது நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் "என் தந்தை என்னை இப்படி ஆக்கவில்லை எனவே நான் என் பிள்ளையை இப்படி ஆக்கிடுவேன்."
கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள் "என் தந்தையால் என் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் நான் என் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவேன்." அவ்ளோ தான் நண்பரே.

மூன்றாவது,


இன்று நிறைய குழந்தைகள் மேலே உள்ள பாரதியின் மூன்றாம் வரிக்கு செல்வதே இல்லை. ஆம் விளையாட்டு என்பதை கணினியும், தொலைக்காட்சியும் தான் நம் குழந்தைகளுக்கு காட்டுகின்றன.


"மாலை முழுவதும்
விளையாட நேரமில்லை
பேருந்துக்கு நிற்கும்
காலையின் சில
நிமிடங்களிலேயே முடிந்து
விடுகிறது பாதி
விளையாட்டு!
மீதிக்குத்தான் நாள் முழுவதும்
காத்திருகின்றன,
சூரியனும், சாலை ஓரமும்!!"



“எண்பது வயது வரை நன்றாக இருந்தார் என் தாத்தா!
அறுபது வயது வரை ஆடிப்பாடினார் என் தந்தை !
பெருமையாதான் உள்ளது,
கூடவே ஆச்சர்யம்!!
ஐந்து வயதிலேயே
மூட்டை பிடித்த என் குழந்தையை பார்த்து!! "


தினமும் கொஞ்சம் நேரமாவது குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். இல்லாவிடில் நீங்கள் தான் குழந்தைகள் வாழ்க்கையோடு விளையாடுவதாக அர்த்தம். உங்களுக்கு யார் விளையாட்டு முக்கியம்??


நான்காவது, 


"இன்னிக்கு
ஸ்கூல்ல என்ன
ஆச்சு தெரியுமா??..............
.
.
.
தாயிடம் சொல்லவேண்டியதை,
செல்ல நாயிடம்
கூறுகின்றன குழந்தைகள் !!!!"


நாம் இன்று நம்முடைய பரபரப்பான நாட்களில் குழந்தைகளுக்கு என்று நேரம் ஒதுக்குவதே இல்லை. உங்கள் உழைப்பு எல்லாம் பிள்ளைகளுக்கு என்றால் முதலில் பாசத்தை கொடுங்கள் பணத்தை பின்னர் கொடுக்கலாம். தினமும் ஒரு அரை மணி நேரம் உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். பேச்சின் முடிவில் நீங்கள்தான் குழந்தையாக இருப்பீர்கள். 

உங்கள் அம்மா, அப்பா இருந்தால் அவர்களுடன் இணைந்து பேசுங்கள். நல்ல புரிந்துணர்வு கிடைக்கும். இதில் ஏற்ப்பட்ட தவறுதான் இன்று முதியோர் இல்லங்கள் இருக்க காரணம். 

எனவே குழந்தைகளை கொஞ்ச காலம் குழந்தைகளாக இருக்க விடுங்கள். ஏனெனில் அந்த உலத்தில் தான் கவலை இல்லை, கபடம் இல்லை. காத்திருக்கலாம் பழம் கனியும் வரை அப்போதுதான் அது சுவைக்கும்.

தெய்வமும் குழந்தையும் ஒன்று என்றே கூறுவார்கள். தெய்வத்தை கல்லாக்கி விட்டோம், குழந்தையை அந்த முயற்ச்சியில் இருக்கிறோம் என்ற உண்மையே இன்றைய நிலைமை.

இந்த பதிவு உங்கள் மனதில் இந்த நிலையை உடைத்தால் அதுவே இந்த பதிவின் வெற்றி. படித்த ஒவ்வொருவரும் கருத்து கூற வேண்டும் என்பது என்பது இங்கு என் எண்ணம்.








◘பலே ட்வீட் ◘

தேடல் என்ற ஒன்று எவரிடம் எதைநோக்கி இருந்தாலும் அதன் முடிவு அன்பு என்ற சொல்லில் மட்டுமே முடியும்.
                                                                                                                     _kuttysuvaru@twitter.com


Wednesday, December 15, 2010

Aptitude4: Square Root Answer ஈசியா கண்டுபிடிக்கலாம்

square root செய்வது Aptitude இல் மிக முக்கியமான  ஒன்று. இதனை எப்படி செய்வது மிகவும் எளிதாக  என்பதை இங்கு காண்போம்.
 இன்றைய நிலைமையில் aptitude என்பது தெரிந்தால் தான் கல்லூரி மாணவர்கள் தங்கள் வேலைக்கான முதல் படியை கடக்கவே முடிகிறது.ஒரு மாணவனாக நான் உணர்ந்தது இது. எனவே உங்களுக்கு தெரிந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதனை நீங்கள் பரிந்துரை செய்யலாம்.

நாம் விசயத்துக்கு வருவோம்,
சென்ற பதிவில் நான் எப்படி ஈசியாக Square செய்வது என்று சொல்லி இருந்தேன். அதை படிக்காதவர்கள் இங்கே செல்லவும். 


கண்டிப்பாக இந்த பதிவை படித்து இருந்தால் மட்டுமே கீழே உள்ளது உங்களுக்கு புரியும். 

இப்போது நாம் (2401)^1/2 க்கு இங்கு எளிதாக square root செய்வோம். 

இங்கு கடைசி எண்ணை கவனிக்கவும் அது 1. நான் இங்கு ஒரு எளிதான வழியை பயன்படுத்த போகிறேன். அதாவது ஒரு எண் 1 இல் முடிந்து இருந்தால் அதன் square root எண் கண்டிப்பாக 1,9 இல் தான் முடியும்.ஆனால் அது எந்த எண் என்பதை நாம் உறுதியாக கூறி விட முடியாது எனவே நாம் கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.

1.நீங்கள் முதலில் ௦ என முடியும் எண்களின் square களை காணவும். அதாவது 10 க்கு நூறு, 20 க்கு 400, இப்படியே செல்லவும் இது மிகவும் எளிதான ஒன்றுதானே.
(1 முதல் 9 வரை முடியும் எண்களின் square உடன் இரண்டு பூஜ்ஜியம் சேர்த்துக் கொள்ளவும்.)
100,400,900,1600,2500,3600,4900,....
இங்கு நமது எண் 1600 மற்றும் 2500 க்கும் இடைப்பட்ட எண்.  எனவே அதன் square root  41 அல்லது 49 . 
2. அடுத்ததாக நீங்கள்  45 இன் square ஐ கண்டுபிடிக்கவும். இதனை எளிதாக செய்ய நீங்கள் சென்ற பதிவின் மூலம் தெரிந்து இருப்பீர்கள். 45 இன் square 2025. நமது எண் 2401. இங்கு 2401 >2025 ஆக உள்ளது. எனவே நமது விடை கண்டிப்பாக 49.

இதை எப்படி மற்ற எண்களுக்கு பயன்படுத்துவது.

Number Square End
1 1
2 4
3 9
4 6
5 5
6 6
7 9
8 4
9 1

இதுதான் உங்களுக்கு எளிதாக square root கண்டு பிடிக்க வழி. இதை மட்டும் நீங்கள் நினைவில் கொண்டால் போதும்.


கவனிக்க இங்கு Numbers என்பது square root செய்யப்பட வேண்டிய எண்.  Square End என்பது அதன் விடையாக வரக்கூடிய எண்ணின் கடைசி எண். இங்கு 5 இல் முடியும் எண்ணை தவிர மற்ற எல்லா எண்ணுக்கும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இது எளிதுதான்.
புரியாவிடின் கேட்கவும்.







◘பலே ட்வீட் ◘
சுஜாதா / பாலகுமாரன்: அப்ப; ஜெமோ / சாரு: இப்ப. தன்னம்பிக்கை தான் புகழ் பெறுகிறது. எனினும், சாதாரணியான எனக்கு இதுவும் கடந்து போகும்.
                                                                                                          _kekkepikkuni@twitter.com
பொண்ணு கிடைத்தாலும் புத‌ன் கிடைக்காதாம். இன்று புத‌ன் கிடைத்துவிட்ட‌து. #யாராவதுஇருக்கிங்க‌ளா?
                                                                                                            _iamkarki@twitter.com

Monday, December 13, 2010

Aptitude: 3.Easy Squaring கத்துக்கலாம்

45^2 இதுக்கு உங்களால எவ்வளவு நேரத்துல விடை சொல்ல முடியும்?? 
உடனே கால்குலேட்டர் எடுத்து போடாதீங்க. என்னால 10   செகண்ட்ல விடை சொல்ல  சொல்ல முடியும்.
இந்த போஸ்ட் படிச்சபின் நீங்களும் இதனை செய்ய முடியும்.


இங்க நான் ஏன் 45ஐ எடுத்துக் கொண்டேன்  என்றால் நீங்கள் 5 என்று முடியும் எண்ணுக்கு எளிதாக square பண்ண  முடிந்தால் வேறு எந்த எண்ணுக்கும் எளிதாக செய்ய இயலும்.
இப்போ கணக்குக்கு வாருங்கள்
இங்கு நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது
  •  5 இல் முடியும் என்னை square செய்தால் உங்கள் விடையின் கடைசி இரண்டு இலக்கங்கள் 25 ஆக மட்டுமே இருக்கும்.

இப்போது 45 க்கு வாருங்கள்.

1 . 5 இல் முடிவதால் நிச்சயமாக கடைசி இரண்டு இலக்கம் 25 .
2 . இப்போது 4 உடன் 1 ஐ கூட்டவும் பின்னர் மற்றொரு 4 உடன் அதனை பெருக்கவும்.
அதாவது (4+1)*4=20. இதுதான் முதல் இரண்டு இலக்கம்.
45^2=2025 ..
3. இதே போல்தான் எந்த எண் 5 இல் முடிந்தாலும் இதனை நீங்கள் பின் பற்றலாம்.

 இது சுலபம் ஆகிவிட்டது  இப்போது மற்ற எண்களுக்கு எப்படி செய்வது??

எடுத்துக்காட்டாக 46 ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.

1.  சாதரணமாக உங்களால் ௦ வில் முடியும் எண்ணை எளிதாக square செய்ய இயலும். இப்போது நான் கூறியபடி செய்தால் உங்களுக்கு 5 இல் முடியும் எண்ணை square செய்வதும் சுலபம்தான்.
2. எனவே இப்போது இங்கு 46 க்கு அருகில் உள்ள எண்ணான 45 ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடைய square மதிப்பு உங்களுக்கு தெரியும் 2025.
3. இதனுடன் இப்போது 46+45=91  ஐ கூட்டவும். 2025+91=2116. இதுதான் விடை.

இதைபோல் நீங்கள் அடுத்த எண்ணை square செய்ய வேண்டுமானால் இரண்டு எண்ணையும் கூட்டி அதை அவைகளின் வித்தியாசத்தை வைத்து கூட்டி விடவும்.
அதாவது 47^2 க்கு 45^2  உடன் 45+47=92*2=184 ஐ கூட்டி விடவும். இதேபோல் எல்லா எண்ணுக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

இன்னும் ஒரு உதாரணம் இப்போது நீங்கள் 49 க்கு square செய்ய வேண்டுமெனில் 45^2க்கு செல்ல வேண்டாம்.நீங்கள் 50 ஐ square செய்து, அதில் இருந்து 50+49=99 ஐ கழித்து விடவும். இப்போது விடை 2401ஐ நீங்கள் எளிதாக பெறலாம்.


இதுதான் இங்கு மிக முக்கியமானது,

நீங்கள் 5 அல்லது 0 வில் முடியும் எண்ணை வைத்து மற்ற எண்களை square செய்யும் போது அது உங்கள் எண்ணை விட பெரிய எண்ணாக இருந்தால்(49 க்கு 50) இரண்டு எண்களையும் கூட்டி அதன் வித்தியாசத்தால் பெருக்கி கழித்து விடவும். அதே சிறிய எண்ணாக இருந்தால்(47 க்கு 45) நீங்கள் இரண்டு எண்களையும் கூட்டி அதன் வித்தியாசத்தால் பெருக்கி கூட்டி விடவும்.

இது ஏற்கனவே தெரிந்து இருந்தால் உகளுக்கு மிகவும் எளிதாக இது தெரியும், மேலும் இதை விட கடினமான aptitude கேள்விகளை தொடரும் போஸ்ட்களில் காண்போம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம்.




◘பலே ட்வீட்◘
ஒட்டு கேட்பது ஆனந்தம் என்றால் பிரபலங்களின் உரையாடல்களை ஒட்டுகேட்பதேன்பது பரமானந்தம் #நீராராடியா #ஒலிநாடாக்கள்
                                                                                                            _piliral@twitter.com
ஈழம் என்று ஒன்று இருப்பதை அடிக்கடி நினைவுபடுத்துவது விகடன் மட்டுமே# பேய் ஆட்சி செய்தால் (ஆனந்த விகடன் )
                                                                                                          _baleprabu@twitter.com



Tuesday, December 7, 2010

Photoshop: 32 Passport size போட்டோ ஒரே லேயரில்

 ஒரே ஒரு A4 பேப்பர் சைஸ் இல் நீங்கள் 32 பாஸ்போர்ட் போட்டோக்களை பெற முடியும். போட்டோஷாப் மூலம் நாம் இதனை செய்ய இயலும்.


1.உங்கள் போட்டோவை போட்டோஷாப்பில் ஓபன் செய்யவும்.

2. Image--> Image Size
அதனை கீழே உள்ள படத்தில் இருப்பது போல செய்து கொள்ளவும்.
கீழே வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளவை மாற்றாமல் செய்யவும்.



3.இதில் "inches" என்று காட்டபட்டுள்ளதை  "cm" எனவும் மாற்றி கொள்ளவும். அவ்வாறு செய்தால், width=3.5cm, Height=4.5cm. இதனை மறந்து விட வேண்டாம். இப்போது ஓகே கொடுக்கவும்.

4. இப்போது நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

# டிஸ்கி: இங்கு கொடுத்துள்ள resolution ஐ  மறந்து விட வேண்டாம். 200 ஆக மட்டும் வைத்து கொள்ளவும். பாஸ்போர்ட் போட்டோ இன் சைஸ் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறிது மாறலாம். இதனை document size என்பதில் உள்ள  width , height என்பதில் மாற்றிக்கொள்ளவும்.  resolution ஐ மாற்ற வேண்டாம்

5. இப்போது edit--> define pattern என்பதை கிளிக் செய்து. உங்கள் போட்டோவை add செய்யவும்.


6.இப்போது ஒரு புதிய இமேஜ் ஓபன் செய்யவும்
File--> New

7. இதன் image Size ஐ கீழே உள்ளபடி மாற்றவும்.


 கவனிக்க இங்கும் resolution 200 ஆகவே உள்ளது.  அத்துடன் width=12 inches, Height=8 inches. என்று வைத்து கொள்ளவும் (A4 சைஸ் பேப்பர்க்கு சமம்.)

8. இப்போது உங்களுக்கு ஒரு புதிய வெற்று இமேஜ் கிடைத்து இருக்கும்.

9. இப்போது Edit--> fill செல்லவும்.


இங்கு use என்பதில் pattern ஐ செலக்ட் செய்யவும்.

10. இப்போது custom pattern இல் உங்கள் படத்தை செலக்ட் செய்யவும்.


11. இப்போது ஓகே கொடுத்து விட்டால் உங்களுக்கு குறைந்த பட்சம் 32 போட்டோ இருக்கும். அதிகமாக இருந்தால் கிராப் செய்து கொள்ளவும். 



டிஸ்கி: நீங்கள் கொடுத்துள்ள  resolution சைஸ் வேறு வேறாக இருந்தால் 32 போட்டோக்கள் உங்களுக்கு வராது.  

இதனை நீங்கள் "டிஜிட்டல் கலர் லேப்" இல் கொடுத்தால் குறைந்த விலைக்கு இவ்வளவையும் பெற முடியும். மிக அதிகபட்சமாக அவர்கள் இதனை 100 ரூபாய்க்கு தர இயலும். இதனை சாதாரண studio வில் நீங்கள் எதிர்பார்க்க இயலாது. 

உங்கள்  சந்தேகங்களை கேட்கவும்.

◘பலே ட்வீட்◘

சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி கும்பிடும் பழக்கம் இந்த பகுத்தறிவாதிகளாக காட்டிக் கொள்வோர்க்கு போய்விடவில்லை.
                                                                                                        _karaiyaan@twitter.com
மிகவும் விரும்பிய பெண்ணை அவளது திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து பார்க்கும் நிலைமை கடினமானது - அவள் மனைவியேஆனாலும் சரி.
                                                                                                                 _kuttysuvaru@twitter.com
ஊரையே கொள்ளையடித்தவன் எல்லாம் கோட்டையில இப்பவும் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் உலகத்தை உலகுக்குக் காட்டியவர் உள்ளேபோய்ட்டார்.
                                                                                                                             _tbiththan@twitter.com
  



Sunday, December 5, 2010

மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்

 வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு  GPRS உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE   (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.
சென்ற கம்ப்யூட்டர் பதிவில் நான் நோக்கியா PC SUITE பற்றி தெளிவாக கூறி இருந்தேன். அதை படிக்க கீழே சொடுக்கவும். 


இப்போது  உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC SUITE வசதியினை  அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS connect செய்ய  நமக்கு அதற்கு உரிய செட்டிங்க்ஸ் வேண்டும்.  எனவே உங்கள் customer care ஐ தொடர்பு  கொண்டு இந்த வசதியினை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

நான் இங்கு சில நெட்வொர்க்களுக்கு எப்படி என்பதை சொல்லி விடுகிறேன்.

AIRTEL: இதற்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள அவசியம் இல்லை, உங்கள் மொபைல் இல் GPRS இருந்தால் சிம் போட்ட உடனேயே அவர்களே செட்டிங்க்ஸ்களை அனுப்பி விடுவர்.

AIRCEL :  இதற்கு ஒரு சிறு வேலை உள்ளது.  "GPRS BP NOK 3110" இதனை  "57788" என்ற எண்ணுக்கு அனுப்பவும். பின்னர் வரும் மெசேஜ்க்கு "YES BP" என்று  reply செய்யவும்.  இப்போது சிறிது நேரத்தில் உங்களுக்கு செட்டிங்க்ஸ் வந்து விடும்.
இதனை அவர்கள் மெசேஜில் சொன்னபடி save செய்து கொள்ளவும்.

* NOK என்பது நோக்கியா போனுக்கு மட்டும், மற்றும் உங்கள் உங்கள் போன் மாடலை  அடுத்ததாக டைப் செய்து அனுப்பவும்.
* மற்ற மாடல்கள் உள்ளவர்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும்.
* சென்னை பயனர்களுக்கு இந்த முறை வேறுபடலாம்.

VODAFONE, DOCOMO, மற்றும் மற்ற சந்தாதாரர்கள் அவர்கள் customer care ஐ தொடர்பு கொண்டு இந்த வசதி எப்படி  என்பதை தெரிந்து கொள்ளவும்.

இந்த வசதிகள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் நோக்கியா போன் வைத்து இருந்தால்

S40:  1 .Menu-->Settings--> configuration Settings--> default configuration settings (choose "mobile office" for airtel users, choose "Aircel Office PR" or "Aircel(--> web)" for aircel users ).
then,  configuration Settings--> preferred access point(select that what you choose in the above)
 and 
2 .Menu--> Web--> Settings--> Configuration settings இதிலும் நீங்கள் மேலே உள்ளது படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது அதன் படி மாற்றி கொள்ளவும். 

S60: same in the above, with small changes as per your mobile menu settings.

இப்போது உங்கள் மொபைல் இல்  நீங்கள் இன்டர்நெட் connection   ஐ ஓபன் செய்து "homepage" செல்லவும் அது கூகுள் homepage க்கு சென்றால் நீங்கள் செய்தது சரிதான்.

இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.

நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். இப்போது கீழ்வரும் விண்டோ  ஓபன் ஆகும்.


இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum failed என்றே வரும்.  வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள்   மொபைல் மாடல் தெரியும்.


இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.



இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose செய்யவும்.

AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,.....இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்

 கீழே உள்ளது AIRCEL பயனர்களுக்கு மட்டும்:

ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect செய்ய முடியும்.  இந்த விண்டோவிலேயே manual பொத்தான் உள்ளது.   இதனை அப்போது கிளிக் செய்யவும்.




அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில் 


Access Point என்பதில் "aircelgprs.pr" என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.

அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்.

அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.

இப்போது நீங்கள் இன்டர்நெட் க்கு என தனியாக recharge செய்து கொள்ளவும்.

Aircel: ரூபாய் 14 (3days), 29(7 days), 98(30 days) (எல்லாமே Easy recharge தான் )

Airtel: ரூபாய் 5(1 day),17(3days),98(30 days) (உங்கள் balance இல் இருந்தே எடுத்து கொள்வார்கள், அல்லது 98 க்கு recharge செய்து கொள்ளலாம்.) 

ஏதேனும் புரியவில்லை எனில் கேட்கவும். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். 

டிஸ்கி: நீங்க இத வச்சு browse மட்டும்தான் பண்ண முடியும்.(ஸ்பீட் 460.8 kb) . நீங்க இத வச்சு  எந்திரன் படம் டவுன்லோட் பண்ண ஒரு மூணு மாசம் ஆகும். 
இத வச்சு நீங்க ஜிமெயில் slow connectionல ஓபன் பண்ணலாம், மத்தபடி எல்லாமே ஓபன் செய்யலாம்.ஆனால் 3ஜி  வரப்போவதால் இதன் ஸ்பீட் மேலும் அதிகரிக்கும்.

ரியல் டைம் example: நான் தாங்க .

அப்புறம் அய்யா சாமி படிச்சுட்டு  எதையாவது கீழ எழுதிட்டு போங்க.






◘பலே ட்வீட்◘

எல்லா பிச்சைக்காரர்களிடத்தும் ஏதேனும் ஒரு நாய் அன்புடன் இருக்கிறது! 
                                                                                                   _sramanaa@twitter.com



Friday, December 3, 2010

விருது பெற்றவர்கள்- விளங்காச் செய்தி இடுகைக்கு

நேற்றைய பதிவான(02/12/2010) 

என்பதற்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு இன்று விருதுகள்.   

முதலில் என் போன்ற புதிய பதிவர்களின் வலைப்பூவிற்கு வருகை புரிபவர்களுக்கு மிகவும் நன்றி.

சென்ற பதிவுக்கான விடைகளை பார்க்கும் முன், கேள்விகளை படிக்க இங்கே சொடுக்கவும். 

 

விளங்கா செய்திக்கு விடை சொல்லு, விருது பெற்றிடு!!

 இதோ விடைகள்    

 

1) எவ்வளவு சாக்லேட் கிடைக்கும் என்றால் 

முதலில் இருகின்றதர்க்கு 15 

இப்போது உங்கள் கையில் 15 காலி சாக்லேட்  பேப்பர் உள்ளது, எனவே இதன் மூலம் 5 புதிய சாக்லேட் பெறலாம். 

மீண்டும் 5 காலி பேப்பர், இப்போது 1 புதிய சாக்லேட் மற்றும் 2 காலி பேப்பர்கள். 

இப்போது இருக்கின்ற ஒரு சாக்லேட்டின் காலி பேப்பர் மற்றும் 2 காலி பேப்பர் உடன் ஒரு புதிய சாக்லேட் பெறலாம்

மொத்தமாக 15+5+1+1=22 .  


2) 2 பழம் இருக்கும் கூடையில
(ஆரஞ்சு & ஆப்பிள் ரெண்டும்) கை வச்சா அதுல என்ன பழம் இருக்குன்னு(ஆப்பிள் அல்லது ஆரஞ்சு தான் இருக்கும்) தெரியும். இப்போ எளிதாக விடை சொல்ல முடியும். 

அதாவது, முதலில் நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கு. 

A. ஆப்பிள்  

B. ஆரஞ்சு 

A . ஆப்பிள்+ஆரஞ்சு : ஆப்பிள் 

                        ஆரஞ்சு : ஆப்பிள்+ஆரஞ்சு

                         ஆப்பிள்:  ஆரஞ்சு.

B.  ஆப்பிள்+ஆரஞ்சு : ஆரஞ்சு

                       ஆரஞ்சு : ஆப்பிள் 

                        ஆப்பிள்:  ஆப்பிள்+ஆரஞ்சு.

இப்போ நல்லா புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். 


3) 2+3=[(2+3)*2]=10

   இதே  போல  

    [(7+9)*9]=144

4) சேலை: ரூ.105, ஜாக்கெட்: ரூ.5. {கல்யாணம் ஆகியிருந்தாலும், அந்த ஆணுக்கு எப்படியும் இந்த கணக்குப் புரியப் போறதில்லை, எதுக்கு இந்த கவலை? #கெக்கே பிக்குணி }


5) 888 + 88 + 8 + 8 + 8=1000

6) முதல் பந்தில் டோனி சிக்ஸர் 

அடுத்த பந்தில் ரன் அவுட்/கேட்ச்

இப்போது யுவராஜ் சிக்ஸர்.

எப்படி ஜெயிச்சோமா!!


7) 204.

ஒரு சதுரத்திற்கு (1*1=1 )

இரு சதுரத்திற்கு (1*1=1 )+(2*2=4)=5

இதே போல  எட்டு சதுரத்திற்கு 1+4+9+16+25+36+49+64=204

இதே மாதிரி எத்தனைக்கு கேட்டாலும் நாம எளிதாக சொல்லலாம்.

8) இந்திய ஜோக் வரிசையில ஆங்கில எழுத்துக்களை வைத்து ஸால்வ் செய்யலாம்.

two/ten

cancel the "T"

wo/en

அப்போது அந்த எழுத்துக்களின் இடத்தினை வைத்து கூட்டவும், 

அதாவது 

w=23,o=15,e=5,n=14

இப்போ 38/19= 2

இல்லை, எப்பவும் சொல்ற (2/10)*0 = 2*0; 0=0 எனவே இடது=வலது.[இது அமெரிக்க விடையாம்]

9) 7*7=49,4*9=36,3*6=18,1*8= 8

10) 8*5ரூ=ரூ40; 

    40*1ரூ=ரூ40; 

    2*ரூ10=ரூ20 , 

ஆக ரூ100  ,50 காயின்கள்.  

 

சரியான விடை கூறி விருது பெறுவோர்:

I.Q Queen விருது பெறுபவர்,  10 விடைகளும் சரியாக கூறிய 

கெக்கே பிக்குணி 

http://kekkepikkuni.blogspot.com/


Full Size Image



 விடைகளை தெரிந்த அளவு கூறி, 
Mister I.Q  விருது பெறுபவர்கள்,

மாப்ள ஹரிஸ்..




nr prabhakaran




 
◘பலே ட்வீட்◘

எந்த தைரியத்துல இவ்ளோ லஞ்சம் வாங்குறாங்க??? நம்பிக்கை....
நம்பிக்கைதானேம்மா  எல்லாம் # கல்யாண் ஜுவல்லர்ஸ் 
                                                                                                    _vivaji@twitter.com                                  




தமிழ் எழுதி

Followers